Posts

Showing posts from September, 2021

சீந்தில் கொடி

Image
  ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் ‘ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் ஏதேனும் உண்டா?’ என்று கேட்பவர்களிடம், ‘இருக்கவே இருக்கிறது சீந்தில்’ எனச் சட்டெனப் பதில் உரைக்கலாம்! வயோதிகம் வாட்டும் போதும், தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்திலும், உடல் நலனை மீட்டெடுக்க சீந்தில் போதும்! பல பருவங்களைக் கடந்து வாழும் ‘மூலிகை மார்க்கண்டேயரான’ சீந்தில் கொடி, மனித குலத்தில் பல மார்க்கண்டேயர்களை உருவாக்குகிறது. பெயர்க்காரணம்: சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்களைக்கொண்டது சீந்தில். ‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில், கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயர். அமிர்தம் என்றால் ‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற அர்த்தத்தில் ‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு. அடையாளம்: இதய வடிவ இலைகளைச் சுமந்துகொண்டு சரசரவெனக் கொடியேறும் தன்மையை இது கொண்டுள்ளது. கொடி வகையானாலும், முற்றிய சீந்தில் கொடி வலிமைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும். ‘மெனிஸ்பெர்மேசியே’ (Menispermaceae) குடும்பத்தின் உறுப்பினரான சீந்தில் கொடியின் தாவரவியல...

கோபுரம் தாங்கி

Image
  கோபுரந்தாங்கி குடிநீரை இரண்டு வாரங்கள் தினமும் இருவேளை பருகி வர, சிறுநீரக கற்கள் யாவும் கரைந்து வெளியேறி விடும். கோபுரந்தாங்கிமூலிகை, செம்பு போன்ற உலோகங்களையும், உப்புகளையும் கரைக்கும் ஆற்றல் மிக்கதால், சிறுநீரக கற்களை, விரைவில் சிறு நீரகத்திலிருந்து வெளியேற்றி, சிறு நீரகத்தை காத்து, உடல் நலத்தை சீராக்கும். ​உடல் தசைகள் வலுவாக கோபுரந்தாங்கி வேரை நன்கு அலசி, நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பொடியை சிறிது எடுத்து, அதில் பனங்கற்கண்டு சேர்த்து நெய்யுடன் கலந்து, தினமும் காலையும் இரவும் என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், உடல் தசைகள், எலும்பு நரம்புகள் நன்கு வலுவேறி, உடல் ஆற்றல் அதிகரிக்கும் அதேபோல. கோபுரந்தாங்கி இலைகள், கொட்டைக் கிரந்தை இலைகள் ஆகிய இரண்டையும் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் போட்டு வேகவிடுங்கள். 100 மிலி அளவு வரும்வரை வற்றச் செய்ய வேண்டும். தொடர்ந்து தினமும் 48 நாட்கள், காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் தசைகள் யாவும் இறுகி, உடல் நலமாகும். ஆயினும், காய கற்பம் எனும் இந்த மருந்தை உட்கொள்ள, சில பத்திய முறைகளை...